தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu

எதெல்லாம் கோடி பெறும்?

மதியார் முற்றம் மதித்துஒருகால் சென்று
 மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர்!உண்ணீர்' என்று உபசரியார் தம்மனையில்
 உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
 கூடுதல் கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
 கோடாமை கோடி பெறும்.

ஔவையார்


தனிப்பாடல் திரட்டு > சிறந்த செயல்கள் > பாடல்: 21

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முகப்பு  Copy URL


Sat, Aug 01, 2026