சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே. 18
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 38. இதோபதேசம் > பாடல்: 2119
The countless Devas worshipped Siva; What becomes them By worshipping Him? Far better it be, That you worship the Holy Guru --who, having himself worshipped Lord Shows the Way of Becoming, too; Sure, indeed, is your Mukti finite.
அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.