கொன்றை வேந்தன் | Kondrai Venthan | full

கொன்றை வேந்தன் | Kondrai Venthan | full
பாடல் எண் பாடல் Verse
0 கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

கொன்றை வேந்தன் > கடவுள் வாழ்த்து > பாடல்: 0

1 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 1

2 ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 2

3 இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 3

4 ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 4

5 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 5

6 ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 6

7 எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 7

8 ஏவா மக்கள் மூவா மருந்து.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 8

9 ஐயம் புகினும் செய்வன செய்.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 9

10 ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 10

11 ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 11

12 ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 12

13 அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

கொன்றை வேந்தன் > உயிர் வருக்கம் > பாடல்: 13

14 கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 14

15 காவல்தானே பாவையர்க்கு அழகு.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 15

16 கிட்டாதாயின் வெட்டென மற.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 16

17 கீழோர் ஆயினும் தாழ உரை.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 17

18 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 18

19 கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 19

20 கெடுவது செய்யின் விடுவது கருமம்.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 20

21 கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 21

22 கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 22

23 கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 23

24 கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 24

25 கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

கொன்றை வேந்தன் > ககர வருக்கம் > பாடல்: 25

26 சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 26

27 சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 27

28 சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 28

29 சீரைத் தேடின் ஏரைத் தேடு.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 29

30 சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 30

31 சூதும் வாதும் வேதனை செய்யும்.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 31

32 செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 32

33 சேமம் புகினும் யாமத்து உறங்கு.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 33

34 சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 34

35 சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 35

36 சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

கொன்றை வேந்தன் > சகர வருக்கம் > பாடல்: 36

37 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 37

38 தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 38

39 திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 39

40 தீராக் கோபம் போராய் முடியும்.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 40

41 துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 41

42 தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 42

43 தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 43

44 தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 44

45 தையும் மாசியும் வையகத்து உறங்கு.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 45

46 தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 46

47 தோழனோடும் ஏழைமை பேசேல்.

கொன்றை வேந்தன் > தகர வருக்கம் > பாடல்: 47

48 நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 48

49 நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 49

50 நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 50

51 நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 51

52 நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 52

53 நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 53

54 நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 54

55 நேரா நோன்பு சீராகாது.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 55

56 நைபவர் எனினும் நொய்ய உரையேல்.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 56

57 நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 57

58 நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

கொன்றை வேந்தன் > நகர வருக்கம் > பாடல்: 58

59 பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 59

60 பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 60

61 பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 61

62 பீரம் பேணி பாரம் தாங்கும்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 62

63 புலையும் கொலையும் களவும் தவிர்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 63

64 பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 64

65 பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 65

66 பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 66

67 பையச் சென்றால் வையம் தாங்கும்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 67

68 பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 68

69 போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

கொன்றை வேந்தன் > பகர வருக்கம் > பாடல்: 69

70 மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 70

71 மாரி அல்லது காரியம் இல்லை.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 71

72 மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 72

73 மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 73

74 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 74

75 மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 75

76 மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 76

77 மேழிச் செல்வம் கோழை படாது.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 77

78 மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 78

79 மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 79

80 மோனம் என்பது ஞான வரம்பு.

கொன்றை வேந்தன் > மகர வருக்கம் > பாடல்: 80

81 வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 81

82 வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 82

83 விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 83

84 வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 84

85 உரவோர் என்கை இரவாது இருத்தல்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 85

86 ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 86

87 வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 87

88 வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 88

89 வைகல் தோறும் தெய்வம் தொழு.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 89

90 ஒத்த இடத்து நித்திரை கொள்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 90

91 ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

கொன்றை வேந்தன் > வகர வருக்கம் > பாடல்: 91

மொத்த பாடல்கள்: 91

முன்   முகப்பு