குறிஞ்சி - தலைவன் கூற்று
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.
-தொல்கபிலர்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக