பாலை - செவிலி கூற்று
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
-ஔவையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 15
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக