குறிஞ்சி - தோழி கூற்று
ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே.
-வருமுலையாரித்தியார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 176
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக