பாலை - தலைவன் கூற்று
இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை எய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாக மணந்துவக் கும்மே.
-மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 189
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக