குறுந்தொகை | Kurunthogai

நெய்தல் - தலைவி கூற்று

சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
படர்சுமந் தெழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னா திரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந் தூர்தரச்
செய்வுறு பாவை யன்னவென்
மெய்பிறி தாகுதல் அறியா தோரே.
 -தேரதரனார்.

குறுந்தொகை > நூல் > பாடல்: 195

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Apr 09, 2026