நெய்தல் - தலைவி கூற்று
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
படர்சுமந் தெழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னா திரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந் தூர்தரச்
செய்வுறு பாவை யன்னவென்
மெய்பிறி தாகுதல் அறியா தோரே.
-தேரதரனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 195
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக