மருதம் - தோழி கூற்று
வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
-மிளைக் கந்தனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 196
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக