குறிஞ்சி - தோழி கூற்று
கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உதுவெம் மூரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.
-குட்டுவன் கண்ணனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 179
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக