முல்லை - தலைவி கூற்று
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
சிறுதலைப் பிணையிற் றீர்த்த நெறிகோட்
டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பிற் புன்புலத் தானே.
-ஔவையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 183
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக