குறிஞ்சி - தலைவி கூற்று
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே.
-மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 185
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக