குறிஞ்சி - தலைவன் கூற்று
பெறுவ தியையா தாயினும் உறுவதொன்
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
கைவள் ளோரி கானந் தீண்டி
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்
மையீ ரோதி மாஅ யோள்வயின்
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
இறுமுறை எனவொன் றின்றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.
-பரணர்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 199
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக