குறுந்தொகை | Kurunthogai

முல்லை - தலைவி கூற்று

பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந்
திழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவா நாமே
கால மாரி மாலை மாமழை
இன்னிசை யுருமின முரலும்
முன்வரல் ஏமம் செய்தகன் றோரே.
 -ஔவையார்.

குறுந்தொகை > நூல் > பாடல்: 200

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Apr 09, 2026