குறிஞ்சி - பாங்கன் கூற்று
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
-மிளைப்பெருங் கந்தனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 204
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக