மருதம் - தலைவி கூற்று
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.
-நெடும் பல்லியத்தனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 203
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக