முல்லை - தோழி கூற்று
திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.
-காக்கை பாடினியார் நச்செள்ளையார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 210
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக