பாலை - தலைவன் கூற்று
அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்ற மிறந்த யாமே
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற்
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ.
குறுந்தொகை > நூல் > பாடல்: 209
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக