பாலை - தோழி கூற்று
அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை
வேனி லோரிணர் தேனோ டூதி
ஆராது பெயருந் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே.
-காவன்முல்லைப் பூதனார்.
குறுந்தொகை > நூல் > பாடல்: 211
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக